கொரோனா தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கான தொழில்நுட்ப நடவடிக்கைகள் முன்னெடுப்பு
கொரோனா தடுப்பூசி அட்டையை பொது இடங்களில் கட்டாயமாக்குவதற்கான தொழில்நுட்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். அதற்கமைய, QR குறியீடு மற்றும் விண்ணப்பத்தை வழங்குவதற்கான திட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். பொது சுகாதார பரிசோதகர்கள் உடனான கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தடுப்பூசிகளை கட்டாயமாக்க முடியாத நிலையில், பொது இடங்களுக்கு பிரவேசிக்கும்போது தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்க முடியும் எனவும் அதற்கான ஏற்பாடுகள் அமுல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed